எல்மினா விமான விபத்தில் கொல்லப்பட்ட பத்து பேரின் சடலங்கள் டி.என்.ஏ மரபணு சோதனைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வேளையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது சடலம், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வாரிசுதாரரிடம் இன்று காலை 9.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 32 வயதான ஹபீஸ் முஹம்மது சலே என்று அடையாளம் கூறப்பட்ட அந்த நபரின் பிரேதம், அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, கிள்ளான், அல் ரஹிமியா மசூதி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட பிரார்த்தனைக்குப் பின்னர், நல்லடக்கம் செய்யப்படுவதற்காக கெடா, ஜெரோங் கிராமம், அல்-ஹுதா மசூதி முஸ்லிம் மையத்து கொல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார். பிரேதத்தை கொண்டு செல்லப்படுவதற்கான பயண ஏற்பாடுகளையும் போலீசார் முறைப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


