எல்மினா விமான விபத்தில் கொல்லப்பட்ட பத்து பேரின் சடலங்கள் டி.என்.ஏ மரபணு சோதனைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வேளையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது சடலம், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வாரிசுதாரரிடம் இன்று காலை 9.30 மணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 32 வயதான ஹபீஸ் முஹம்மது சலே என்று அடையாளம் கூறப்பட்ட அந்த நபரின் பிரேதம், அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, கிள்ளான், அல் ரஹிமியா மசூதி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட பிரார்த்தனைக்குப் பின்னர், நல்லடக்கம் செய்யப்படுவதற்காக கெடா, ஜெரோங் கிராமம், அல்-ஹுதா மசூதி முஸ்லிம் மையத்து கொல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார். பிரேதத்தை கொண்டு செல்லப்படுவதற்கான பயண ஏற்பாடுகளையும் போலீசார் முறைப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


