கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் பெரும் சரிவைச் சந்தித்த அம்னோவின் பொற்காலத்தை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கினால் மீட்டெடுக்க முடியாது என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
அரச மன்னிப்பின் மூலம் நஜீப் விடுதலையானால், அம்னோ பலம் பெறும் என்று அதன் உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி கூறியிருப்பது, ஒரு பகல் கனவாகும் என்று லிம் கிட் சியாங் வர்ணித்துள்ளார்.
பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் தொடக்கத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த கொள்கையினால் அம்னோவின் நான்கு ஆரம்ப காலத் தலைவர்களான ஓன் ஜஃபார், துங்கு அப்துல் ரஹ்மான், ரசாக் ஹுசேன் மற்றும் ஹுசேன் ஓன் மக்களின் அபரிமித ஆதரவைப் பெற்றனர்.
மலேசியா அந்த அடிப்படை கொள்கைக்கு மீண்டும் திரும்பினால் மட்டுமே மக்களின் ஆதரவை அம்னோ பெற முடியுமே தவிர நஜீப்பினால் அல்ல என்று முன்னாள் இஸ்கண்டார் புத்ரி எம்.பி.யுமான லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


