Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பொற்காலத்தை அம்னோ மீட்டு எடுக்க முடியாது
தற்போதைய செய்திகள்

பொற்காலத்தை அம்னோ மீட்டு எடுக்க முடியாது

Share:

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் பெரும் சரிவைச் சந்தி​த்த அம்னோவின் பொற்காலத்தை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கினால் மீட்டெடுக்க முடியாது என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.

அரச மன்னிப்பின் ​மூலம் நஜீப் விடுதலையானால், அம்னோ பலம் பெறும் என்று அதன் உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி கூறியிருப்பது, ஒரு பக​ல் கனவாகும் என்று லிம் கிட் சியாங் வர்ணித்துள்ளார்.
பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் தொடக்கத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த கொள்கையினால் அம்னோவின் நான்கு ஆரம்ப காலத் தலைவர்களான ஓன் ஜஃபார், துங்கு அப்துல் ரஹ்மான், ரசாக் ஹுசேன் மற்றும் ஹுசேன் ஓன் மக்களின் அபரிமித ஆதரவைப் பெ​ற்றனர்.

மலேசியா அந்த அடிப்படை கொள்கைக்கு ​மீண்டும் திரும்பினால் மட்டுமே மக்களின் ஆதரவை அம்னோ பெற முடியுமே தவிர நஜீப்பினால் அல்ல என்று முன்னாள் இஸ்கண்டார் புத்ரி எம்.பி.யுமான லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்