May 18, 2026
Thisaigal NewsYouTube
4 போலீஸ்காரர்களுக்குத் தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

4 போலீஸ்காரர்களுக்குத் தடுப்புக் காவல்

Share:

மலாக்கா, ஜூன்.24-

காருக்குள் மிக நெருக்கமாக இருந்த இளம் ஜோடியினரை, மடக்கி, நடவடிக்கை எடுக்காமல் இருக்க, 2 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் நான்கு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 க்கும், 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு போலீஸ்காரர்கள், இன்று காலையில் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வரும் ஜுன் 28 ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பெற்றது.

நேற்று திங்கட்கிழமை, மலாக்கா எஸ்பிஆர்எம் அலுவலகத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட்ட அந்த நான்கு போலீஸ்காரர்களையும் சம்பந்தப்பட்ட தம்பதியர் துல்லியமாக அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆய்ர் குரோ, ஜாலான் மலாக்கா மால் பேரங்காடி மையத்தின் முன்புறம் கார் நிறுத்தும் இடத்தில் அத்தம்பதியரை மடக்கி லஞ்சம் கோரியதாக அந்த நான்கு போலீஸ்காரர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை