Mar 17, 2026
Thisaigal NewsYouTube
சபா 40 விழுக்காடு வருவாய் விவகாரம்: அமைந்தது சிறப்புக்குழு
தற்போதைய செய்திகள்

சபா 40 விழுக்காடு வருவாய் விவகாரம்: அமைந்தது சிறப்புக்குழு

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.17-

சபா மாநிலத்தில் பெறப்படும் வருவாயில் 40 விழுக்காடுத் தொகையை அந்த மாநிலத்திற்கே மத்திய அரசாங்கம் திருப்பித் தர வேண்டும் என்ற கோத்தா கினபாலு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயலாக்கம் குறித்து விவாதிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

1963 ஆம் ஆண்டு மலேசிய ஒப்பந்த ஷரத்துக்கு ஏற்ப 40 விழுக்காட்டுத் தொகையை வழங்குவது தொடர்பில் விவாதிக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அந்தக் குழுவின் தொழில்நுட்பக் குழுவின் தலைவரான ஃபடில்லா யூசோஃப் குறிப்பிட்டார்.

இந்தச் சிறப்புக் குழுவில் விவாதிக்கக்கூடிய விவகாரங்கள் நேரடியாக அமைச்சரவையில் தெரிவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இன்று கோத்தா கினபாலுவில் 40 விழுக்காடு வருவாய் தொடர்பான சிறப்புக்குழு கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு