Dec 5, 2025
Thisaigal NewsYouTube
கடப்பிதழ் காலக்கெடு 10 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

கடப்பிதழ் காலக்கெடு 10 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்

Share:

மலேசிய கடப்பிதழின் செல்லத்தக்க காலக்கெடு 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று தீபகற்ப மலேசிய குடிநுழைவுத்துறை தொழிற்சங்கம், அரசாங்கத்திற்கு இன்று பரிந்துரை செய்துள்ளது.

கடப்பிதழின் அதிகமான பக்கங்களை பெரும்பாலோரி பயன்படுத்தாமல் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், அந்த கடப்பிதழின் செல்லத்தக்க ஆண்டு கூடிய பட்சம் 5 ஆண்டு காலமாகும். கடப்பிதழை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தவதற்கு அனுமதிப்பது மூலம் ஒரு முறை விண்ணப்பிக்கும் கடப்பிதழை மக்கள் பத்து ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும் என்று தொழிற்சங்கத் தலைவர் கேபிசம் அஜீத் சிங் தெரிவித்தார்.

கடப்பிதழின் காலக்கெடு, 6 மாதத்திற்கும் குறைவாக இருக்குமானால் அந்த கடப்பிதழை கொண்டு இருப்பவர்கள், தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு பெரும்பாலான நாடுகள் அனுமதி மறுக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு உரிய மலேசிய கடப்பிதழ் காலக்கெடுவானது, 4 ஆண்டுகள் 6 மாதங்களே செல்லத்தக்கவையாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடப்பிதழில் காலக்கெடுவை 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது மூலம் கடப்பிதழை புதுப்பிக்க வருகின்றவர்களின் எண்ணிக்கை குறையும். இது குடிநுழைவு ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் என்று கேபிசம் அஜீத் சிங் பரிந்துரை செய்துள்ளார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்