Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கடப்பிதழ் காலக்கெடு 10 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

கடப்பிதழ் காலக்கெடு 10 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும்

Share:

மலேசிய கடப்பிதழின் செல்லத்தக்க காலக்கெடு 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று தீபகற்ப மலேசிய குடிநுழைவுத்துறை தொழிற்சங்கம், அரசாங்கத்திற்கு இன்று பரிந்துரை செய்துள்ளது.

கடப்பிதழின் அதிகமான பக்கங்களை பெரும்பாலோரி பயன்படுத்தாமல் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், அந்த கடப்பிதழின் செல்லத்தக்க ஆண்டு கூடிய பட்சம் 5 ஆண்டு காலமாகும். கடப்பிதழை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தவதற்கு அனுமதிப்பது மூலம் ஒரு முறை விண்ணப்பிக்கும் கடப்பிதழை மக்கள் பத்து ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும் என்று தொழிற்சங்கத் தலைவர் கேபிசம் அஜீத் சிங் தெரிவித்தார்.

கடப்பிதழின் காலக்கெடு, 6 மாதத்திற்கும் குறைவாக இருக்குமானால் அந்த கடப்பிதழை கொண்டு இருப்பவர்கள், தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு பெரும்பாலான நாடுகள் அனுமதி மறுக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு உரிய மலேசிய கடப்பிதழ் காலக்கெடுவானது, 4 ஆண்டுகள் 6 மாதங்களே செல்லத்தக்கவையாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடப்பிதழில் காலக்கெடுவை 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது மூலம் கடப்பிதழை புதுப்பிக்க வருகின்றவர்களின் எண்ணிக்கை குறையும். இது குடிநுழைவு ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்கும் என்று கேபிசம் அஜீத் சிங் பரிந்துரை செய்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்