குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு , குறிப்பாக பி40 குழுமத்திற்கு உதவும் ஐ - தெக்காட் சமூக நிதித் திட்டத்திற்கு மானிய ஒதுக்கீட்டை அரசாங்கம் 60 லட்சம் வெள்ளியாக உயர்த்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
2023 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 40 லட்சம் வெள்ளியிலிருந்து இந்த ஆண்டுக்கான ஐ-தெக்காட்டின் மொத்த உதவி தொகை ஒரு கோடி வெள்ளியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
தேசிய வறுமையை ஒழிக்கவும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.
ஐ-தெக்காட் என்பது பேங்க் நெகாரா மலேசியாவால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


