நாட்டின் மொழிக்காப்பகமான டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவின் 67 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம், அடுத்த ஆண்டு முதல் பள்ளி அளவில் முன்னெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிபிபி எனப்படும் டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவுடன் கல்வி அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பள்ளி அளவில் மொழியை வளப்படுத்தும் முயற்சிக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபட்லினா சிடெக் தெரிவித்தார். மலாய் மொழி வளர்ச்சியில் அக்கறையும், கடப்பாடும் கொண்டு, மலாய் மொழியின் பயன்பாடு தரமாக இருப்பதை உறுதி செய்து வரும் டேவான் பஹாசா டான் புஸ்தாக்காவின் 67 ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வை கோலாலம்பூரில் உள்ள விஸ்மா டிபிபி யில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஃபட்லினா சிடெக் இதனை தெரிவித்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


