May 28, 2026
Thisaigal NewsYouTube
விபத்து : விரைவு பேருந்து ஓட்டுநர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

விபத்து : விரைவு பேருந்து ஓட்டுநர் படுகாயம்

Share:

நீலாய், மார்ச்.22-

நெகிரி செம்பிலான், நீலாய் அருகில் எலிட் நெடுஞ்சாலையின் தெற்கு வழித்தடத்தில் 43 ஆவது கிலோ மீட்டரில் விரைவு பேருந்து ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சென்று கொண்டிருந்த டிரெய்லர் லோரியின் பின்புறத்தில் மோதியதில் பேருந்து ஓட்டுநர் படுகாயத்திற்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் நிகழ்ந்தது. அந்த ஹீனோ ரக விரைவு பேருந்து, ஒரு மலேசிய மொழிப் பெயர்ப்பாளர் மற்றும் 20 சீனப் பிரஜைகளை ஏற்றிக் கொண்டு, கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

51 வயது ஓட்டுநரால் அந்த பேருந்து ஷா ஆலாமிலிருந்து செனாவாங் வழியாக சிங்கப்பூரை நோக்கி இயக்கப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அப்துல் மாலிக் குறிப்பிட்டார்.

காயமுற்ற ஓட்டுநர், சைபர் ஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததைத் தொடர்ந்து சிரம்பான் துவான்கு ஜாபார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது