Feb 3, 2026
Thisaigal NewsYouTube
அக்டோபர் 1 முதல் புக்கிட் சாகார் சிஐகியூ செயல்பாட்டிற்கு வரும்
தற்போதைய செய்திகள்

அக்டோபர் 1 முதல் புக்கிட் சாகார் சிஐகியூ செயல்பாட்டிற்கு வரும்

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.03-

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை, புக்கிட் ஸாஆற் ஒருங்கிணைந்த குடிநுழைவு, சுங்கவரி மற்றும் தனிமைப்படுத்தல் CIQ வளாகத்தில் இந்த ஆண்டு தனது செயல்பாடுகளைத் தொடங்க உள்ளது.

இது குறித்து கருத்துரைத்த அதன் தலைமை இயக்குநர் Datuk Seri Mohd Shuhaily Mohd Zain , இந்த CIQ வளாகம் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் முழுமையாகச் செயல்படும் என்றும், நாளொன்றுக்கு சுமார் 10,000 பயணிகள் வரை கையாளும் திறன் கொண்டது என்றும் தெரிவித்தார்.

இந்த நுழைவாயில் புக்கிட் சாகார் முதல் உட்லண்ட்ஸ் வரை சுமார் 4 முதல் 5 கிலோமீட்டர் வரையிலான RTS எனும் ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவு போக்குவரத்து அமைப்பு இரயில் பாதையை உள்ளடக்கியது. சிங்கப்பூர் மற்றும் புக்கிட் சாகார் ஆகிய இரு பகுதிகளிலும் குடிநுழைவுச் செயல்பாடுகள் இருக்கும்.

அதே போல் சிங்கப்பூர் அதிகாரிகளும் தங்கள் தரப்பில் பணிகளை மேற்கொள்வர். இது ஜோகூர் பாலம் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் ஒரு முயற்சியாகும் என்று Mohd Shuhaily கூறினார்.

Related News

ஒருதலைப்பட்ச மதமாற்றத்திற்கு எதிரான இந்திரா காந்தியின் வழக்கு: மே 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்

ஒருதலைப்பட்ச மதமாற்றத்திற்கு எதிரான இந்திரா காந்தியின் வழக்கு: மே 21-ஆம் தேதி தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்

இரு சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: சமூக ஊடகப் பிரபலம் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

இரு சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: சமூக ஊடகப் பிரபலம் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மீதமுள்ள உணவை மீண்டும் பயன்படுத்தியதாகப் புகார்: சிரம்பான் நாசி கண்டார் உணவகம் மீது விசாரணை

மீதமுள்ள உணவை மீண்டும் பயன்படுத்தியதாகப் புகார்: சிரம்பான் நாசி கண்டார் உணவகம் மீது விசாரணை

முதியவர் மீது தாக்குதல்: குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனநலப் பரிசோதனை

முதியவர் மீது தாக்குதல்: குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனநலப் பரிசோதனை

பாலியல் தொல்லை புகார்: கிராப் ஓட்டுநரின் உரிமம் ரத்து

பாலியல் தொல்லை புகார்: கிராப் ஓட்டுநரின் உரிமம் ரத்து

சைஃபுடின்: ரயில்வே கேபிள் திருட்டைத் தடுக்க கடுமையானச் சட்டங்கள் அவசியம்

சைஃபுடின்: ரயில்வே கேபிள் திருட்டைத் தடுக்க கடுமையானச் சட்டங்கள் அவசியம்