கோலாலம்பூர், மார்ச்.29-
மலேசியா வழங்கியுள்ள 374 டன் மதிப்பிலான மாந்தநேய உதவிப் பொருட்களை ராஃபா (Rafah) எல்லை வழியாகக் காஸா மக்களுக்குக் கொண்டுச் சேர்ப்பதற்கு எகிப்து அதிபர் Abdel Fattah el-Sis முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட காஸா மக்களுக்கு இந்த அவசர உதவிகள் ஏப்ரல் மாதம் முதல் சென்றடையும் வகையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எகிப்து அதிபரிடம் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த உறுதிமொழி கிடைத்துள்ளது.
இஸ்ரேல் தரப்பிலிருந்து எத்தகைய தடைகள் வந்தாலும் அதற்கு மலேசியா ஒரு போதும் பணியாது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.








