Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்திட்டங்களை தோட்டத் தொழிலாளர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

சட்டத்திட்டங்களை தோட்டத் தொழிலாளர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 27-

நாட்டிலுள்ள சட்ட திட்டங்களை தோட்டத் தொழிலாளர்கள் அவசியம் தெரிந்த வைத்திருக்க வேண்டும் என்று முன்னாள் மாநில போலீஸ் படைத்தலைவர் டத்தோ ஸ்ரீ அ.தெய்வீகன் அறிவுறுத்தினார்.

சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை புரிந்துணர்வு முதலியவற்றில் பிரச்சினைகள் தலைத்தூக்கியதன் காரணமாகத்தான் இந்தியர்கள் மத்தியில் அதிக அளவில் குற்றச் செயல்கள் உருவாக காரணமாக உள்ளதை போலீஸ் துறையில் 40 ஆண்டு கால சேவை ஆற்றிய போது தாம் மேற்கொண்ட ஆய்வின் வழி தெரிந்துகொண்டதாக டத்தோஸ்ரீ தெய்வீகன் கூறினார்.

 கிள்ளானில் கோல் கோஸ்ட் ஹோட்டலில் சிலாங்கூர் மாநில தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரண்டு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு உரையாற்றிய போது டத்தோ ஸ்ரீ அ.தெய்வீகன் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய டத்தோஸ்ரீ தெய்வீகன், விட்டுக் கொடுக்கும் பனப்பாக்குவத்தை இந்தியர்கள் கடைபிடிக்க வேண்டும். ஒரு வினாடி கோபமே, பல அசம்பாவிதத்திற்கு வழி வகிக்கின்றது. 

எனவே இந்த கருத்தரங்கில கலந்துக் கொண்டுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒழுக்க மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கோட்டுக் கொண்டார்.

இந்த நிகழவில் சிலாங்கூர் மாநில செயலாளர் வை.தாமசேகரன், பேராக் மாநில செயலாளர் எம்.குணசன், தேசிய உத்தியோகஸ்தர் எஸ்.நாராயணசாமி உட்பட 60 தோட்ட பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

Caption

டத்தோஸ்ரீ அ. தெய்வீகன்,
முன்னாள் மாநில போலீஸ் தலைவர்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்