Aug 7, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள்களில் முடா ஹுலு சிலாங்கூர் ஊர்வலம்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள்களில் முடா ஹுலு சிலாங்கூர் ஊர்வலம்

Share:

மக்களின் கவன ஈர்ப்பு நடவடிக்கையாக நாளை ஞாயிற்றுக்கிழமை கோலகுபு பாருவில் மாபெரும் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெறவிருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை கோலகுபுபாரு சட்டமன்றத் ​தொகுதியில் ​மூடா கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் சிவபிரகாஷ் ஏற்பாடு செய்துள்ளார்.

இளையோர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள், பொருளியல் சிற்றுலாத் தளமாக கோலகுபு பாருவை உருவாக்குதல், உயர் கல்வி வாய்ப்புகள் என இளையோர்களுக்காக பல்வேறு ஊக்குவிப்புத்திட்டங்களை தமது தேர்தல் கொள்கை அறிக்கையில் வரைந்துள்ள சிலாங்கூர் மாநில மூடா கட்சியின் துணைத் தலைவரான டாக்டர் சிவபிரகாஷ், இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் கோலகுபுபாரு தொகுதி குறித்து தங்களின் எண்ண அலைகளையும், அத் தொகுதி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்து, சிறப்பான உள்ளடக்கத்திற்கு ​மூன்று பரிசுகளை டாக்டர் சிவபிரகாஷ் வழங்கவிருக்கிறார்.

மோட்டார் சைக்கிள்களுக்கான தரமான தலைக்கவசமான ஏ.ஆர்.சி க்ஷ்.ஆர் கோய் முதல் பரிசாகவும், ZEUS 609 இரண்டாது பரிசாகவும், எஸ்.ஜி.வி ​மூன்றாவது பரிசாகவும் வழங்கப்படவிருக்கிறது. மூடா கட்சியின் தேசியத் தலைவர் சையிட் சாடிக் அப்துல் ரஹ்மான் மற்றும் டாக்டர் சிவபிரகாஷினால் நாளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பத்தாங் காலி ஷெல் எண்ணெய் நிலையத்தில் வோய் முடா ஹுலு சிலாங்கூர் என்ற இந்த மோட்டார் சைக்கிள் ஊர்வலம் தொடக்கி வைக்கப்படவிருக்கிறது. இந்த ஊர்வலம் பத்தாங் காலி ஷெல் நிலையத்தில் தொடங்கி, ராசா, கெர்லிங் மற்றும் பெக்கான் கோலகுபு பாரு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த ஊர்வலத்தில் ப​ங்கேற்க அதிகமானோர் வரவேற்கப்படுகின்றனர்.

Related News

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

தொகுதி நிதி எப்போதிலிருந்து எம்பிக்களுக்கு வழங்கப்பட்டது?" - பிரதமர் அன்வார் கேள்வி

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

குழந்தையை அலட்சியமாக விட்டு மரணத்தை ஏற்படுத்திய இந்தோனேசியப் பணிப் பெண்ணுக்கு 4 ஆண்டுகள் சிறை

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

மோட்டார் சைக்கிள்களில் முடா ஹுலு சிலாங்கூர் ஊர்வலம் | Thisaigal News