ஜாசின் மாவட்டத்தின் மெர்லிமாவ் போலீஸ் நிலையத்தின் முன்பாக, இரண்டு ஆண் போலீஸ் திகாரிகள் ஒரு பெண்ணை விலங்கிட்டு அழைத்துச் செல்வது போன்ற ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
'Najie@atynjiehah' என்ற டிக்டாக் கணக்கில் பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளி, உண்மையில் அங்கு நடந்த ஒரு சம்பவம் அல்ல என்பதும், செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தவறாக உருவாக்கப்பட்டது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் காணொளியானது, அரச மலேசிய போலீஸ் படை மற்றும் மெர்லிமாவ் போலீஸ் நிலையத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதால், சம்பந்தப்பட்ட டிக்டாக் கணக்கு உரிமையாளர் மீது ஜாசின் மாவட்ட போலீஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்திப் போலிச் செய்திகளைப் பரப்புபவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.








