Mar 29, 2026
Thisaigal NewsYouTube
உலு யாம் பாருவில் பயங்கரத் தீ விபத்து: 11 பேர் கொண்ட குடும்பம் வீட்டை இழந்த சோகம்
தற்போதைய செய்திகள்

உலு யாம் பாருவில் பயங்கரத் தீ விபத்து: 11 பேர் கொண்ட குடும்பம் வீட்டை இழந்த சோகம்

Share:

உலு சிலாங்கூர், மார்ச்.29-

உலு சிலாங்கூர், உலு யாம் பாருவில் உள்ள கம்போங் பாசீரில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் ஒரு வீடு 80 விழுக்காடு எரிந்து சாம்பலானதால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தங்களது தங்கும் இடத்தைப் பறி கொடுத்துள்ளனர். இரவு 11:42 மணியளவில் தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் இருந்த மூன்று ஆண்கள், மூன்று பெண்கள், ஒரு மாற்றுத் திறனாளிப் பெண், நான்கு சிறுவர்கள் என அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதை உறுதிச் செய்தனர். தீ விபத்திற்கான காரணம், சேத மதிப்பு ஆகியன குறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தி வருவதாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

Related News