May 6, 2026
Thisaigal NewsYouTube
சாலை நடுவில் குறுக்கே நின்ற லாரி மீது மோதி மற்றொரு லாரி ஓட்டுநர் பலி: ஜெராந்துட்டில் நிகழ்ந்த சோகம்
தற்போதைய செய்திகள்

சாலை நடுவில் குறுக்கே நின்ற லாரி மீது மோதி மற்றொரு லாரி ஓட்டுநர் பலி: ஜெராந்துட்டில் நிகழ்ந்த சோகம்

Share:

ஜெராந்துட், ஜனவரி.23-

பகாங், ஜெராந்துட், புலாவ் தாவாரில் சாலையின் குறுக்கே நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் அதன் 55 வயது ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணியளவில், ஜெராந்துட் - புலாவ் தாவார் - ஜெங்கா 24 சாலையின் 24-வது கிலோமீட்டரில் நிகழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த அஹ்மாட் ஷாலாபாய் அப்துல் ஹாமிட் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் சிக்கிய மற்றொரு லாரியின் 38 வயது ஓட்டுநர், சாலையோரம் மணலைக் கொட்டி விட்டு லாரியைத் திருப்ப முயன்றுள்ளார். அப்போது அந்த லாரி சாலையின் குறுக்கே நின்றபடி போக்குவரத்திற்குத் தடையாக இருந்துள்ளது

அந்தச் சமயம் நேராக வந்து கொண்டிருந்த அஹ்மாட் ஷாலாபாய், எதிர்பாராத விதமாக குறுக்கே நின்ற லாரி மீது மோதினார்.

இந்தக் கடுமையான மோதலில் அஹ்மாட் ஷாலாபாய் உயிரிழந்த வேளையில், குறுக்கே நின்ற லாரியின் ஓட்டுநர் எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினார். பலியானவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஜெராந்துட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று ஜெராந்துட் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் அஸாஹாரி முக்தார் தெரிவித்தார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்