மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் புதிய தலைமை ஆணையராக டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான்,அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
டான் ஸ்ரீ அசாம் பாக்கிக்கு பதிலாக இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான நியமனக் கடிதத்தை அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் கடந்த ஏப்ரல் 25 அன்று வழங்கியிருந்தார். மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் ஒப்புதலுடன், 2009 எஸ்.பி.ஆர்.எம் சட்டத்தின் பிரிவு 5 ன் கீழ் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.
டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான், இன்று மே 13 ஆம் தேதி முதல் 2028 ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி வரை இரண்டு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவார். நாட்டின் நேர்மைத்தன்மை, நல்லாட்சி மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த இவரின் தலைமை உதவும் என எஸ்.பி.ஆர்.எம் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.








