Mar 31, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

Share:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் அருகே நேற்று, சுமார் 31 குற்றச்செயல்களில் தொடர்புடைய உள்ளூர் நபர் ஒருவரை, போலீசார் வாகனங்களில் துரத்திச் சென்று கைது செய்தனர்.

நேற்று வழக்கமான குற்றத்தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், சிவப்பு நிற ஹோண்டா சிவிக் காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.

ஆனால், அந்த வாகன ஓட்டுநர் நிற்க மறுத்து, தப்பிச் செல்ல முயன்றதாக கேஎல்ஐஏ போலீஸ் தலைவர் எம். ரவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்நபர் கேஎல்ஐஏ முனையத்தில் 3-வது தளத்தை நோக்கி வேகமாக தப்பிச் செல்ல முயன்றபோது, அங்கிருந்த பொதுமக்களின் 5 வாகனங்களையும் மோதி சேதப்படுத்தியுள்ளார்.

அதனையடுத்து, அவரது வாகனத்தைத் துரத்திச் சென்ற போலீசார், பொதுமக்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இன்றி அந்நபரை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

30 வயதான அந்நபர் மீது போதைப் பொருள் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் எம். ரவி குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்