Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளிக் கடைகள் காற்றில் பறந்தன
தற்போதைய செய்திகள்

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளிக் கடைகள் காற்றில் பறந்தன

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.02-

கோலாலம்பூர் மாநகரில் இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தகப் பகுதியான பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் அமைத்த தீபாவளிக் கடைகள் இன்று காலையில் காற்றில் பறந்தன.

கனமழையுடன் வீசிய பலத்த காற்றைத் தொடர்ந்து பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் போடப்பட்டிருந்த தீபாவளிக் கடைகள் அனைத்தும் காற்றில் பறந்தது வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வரும் அக்டோபர் 20 ஆம் தேதி இந்துப் பெருமக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தின் பிரதான சாலையில் பிரத்தியேகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு அங்கு கூடாரங்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த கூடாரங்கள் இன்று காற்றில் பறந்தும், சரிந்து விழுந்தும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து டிபிகேஎல் பணியாளர்கள் அக்கூடாரங்களை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து