Mar 22, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணின் அழுகிய சடலம் மீட்பு
தற்போதைய செய்திகள்

பெண்ணின் அழுகிய சடலம் மீட்பு

Share:

சிப்பாங், செப்டம்பர்.10-

கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் பெண் ஒருவரின் அழுகிய சடலத்தை போலீசார் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் லிமோ கார் நிறுத்தும் இடத்திற்கு அருகில் மீட்டுள்ளனர்.

கடந்த செப்டம்பர் முதல் தேதி இரவு 7.50 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலை தொடர்ந்து போலீசார் அவ்விடத்திற்கு விரைந்ததாக கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்மான் ஷாரியாட் தெரிவித்தார்.

T சட்டை, காற்சட்டை அணிந்த நிலையில் காணப்பட்ட அந்தப் பெண்ணின் சடலத்தின் தலை சிதைந்த நிலையில் காணப்பட்டது. அவர் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. செர்டாங் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்தப் பெண்ணின் உடலில் நான்கு இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஏசிபி அஸ்மான் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து