Apr 1, 2026
Thisaigal NewsYouTube
GISB Holdings வழக்கு: பூர்வாங்க ஆட்சேபனை மனு மீதான தீர்ப்பு ஜனவரி 14 இல் வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

GISB Holdings வழக்கு: பூர்வாங்க ஆட்சேபனை மனு மீதான தீர்ப்பு ஜனவரி 14 இல் வழங்கப்படும்

Share:

டிச. 18-

ஆதரவற்ற இல்லங்களை சேர்ந்த சிறார்கள் சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பில் அந்த இல்லங்களை வழிநடத்தி வந்த GISB Holdings நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி Datuk Nasiriddin Mohd Ali மற்றும் அவரின் மனைவி Datin Azura Muhamad Yusof ஆகியோர் சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பான வழக்கில் ஜோகூர்பாரு உயர் நீதிமன்றம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி தனது முடிவை அறிவிக்கவிருக்கிறது.

2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டமான சொஸ்மாவின் கீழ் அந்த தம்பதியர் தடுத்து வைக்கப்பட்டு இருப்பது சட்டவிரோதமானது என்றும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சார்வு செய்துள்ள Habeas Corpus எனும் ஆட்கொணர் வழக்கு மனுவிற்கு சட்டத்துறை அலுவலகம் சார்பில் ஆஜரான கூட்டரசு வழக்கறிஞர்கள் தங்களின் பூர்வாக ஆட்சேபத்தை தெரிவித்துள்ளனர்.

அந்த தம்பதியர் சார்வு செய்துள்ள ஆட்கொணர் மனுவிற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கக்கூடாது என்று கூட்டரசு வழக்கறிஞர் குழுவிற்கு தலைமையேற்ற Mohamad Firdaus Sadani Ali கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்..

இது போன்ற ஆட்கொணர் மனுவிற்கு அனுமதி அளித்தால், நீதிமன்ற நடைமுறைகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, கொல்லைப்புற வழியாக வெளியேறி விடுவார்கள் என்று கூட்டரசு வழக்கறிஞர் தமது பூர்வாக ஆட்சேபத்தில் தெரிவித்துள்ளார்.

கூட்டரசு வழக்கறிஞரின் இந்த பூர்வாங்க ஆட்சேப மனுவைத் தொடர்ந்து அந்த தம்பதியரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் ஆட்கொணர் மனுவிற்கு அனுமதி அளிப்பதா? இல்லையா? என்பது குறித்து உயர் நீதிமன்றம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி தனது முடிவை அறிவிக்கவிருக்கிறது.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்