May 4, 2026
Thisaigal NewsYouTube
232.5 மில்லியன் ரிங்கிட் முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீதான விசாரணை நாளை தொடக்கம்
தற்போதைய செய்திகள்

232.5 மில்லியன் ரிங்கிட் முறைகேடு வழக்கு: முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீதான விசாரணை நாளை தொடக்கம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.08-

முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் மீது சுமத்தப்பட்டுள்ள 232.5 மில்லியன் ரிங்கிட் அதிகார முறைகேடல், 200 மில்லியன் ரிங்கிட் கறுப்புப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடங்குகிறது. இந்த விசாரணையில் சுமார் 30 அரசு தரப்பு சாட்சிகள் வாக்குமூலம் அளிக்க உள்ள நிலையில், நாளை முதல் கட்டமாக இரண்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. Jana Wibawa திட்டத்தின் கீழ் முறைகேடாக நிதி பெற்றதாகக் கூறப்படும் இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 29 நாட்களுக்கு நடத்த நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.

Related News