போர்ட் டிக்சன், தாமான் ரியாவில் உள்ள மின் சிகரெட் கடைக்குத் தீ வைக்கப்பட்ட விவகாரம் குறித்த காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற நிலையில், அதில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் கும்பலை காவல் துறை தேடி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 6.30 மணிக்கு பதிவேற்றப்பட்ட 2 காணொலிகளைத் தமது தரப்பு ஆய்வு செய்து வருகிறது எனவும், கடந்த திங்கட்கிழமை இரவு 9.50 மணி அளவில் அக்கடையில் தீ பிடித்ததகவும் போர்ட் டிக்சன் காவல் துறைத் தலைவரான Supt ஐடி ஷாம் முஹமாட் தெரிவித்தார்.
50 ஆயிரம் வெள்ளி நட்டத்தை ஏற்படுத்திய இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறை வலை வீசி தேடி வருகிறது.








