பெத்தாலிங் ஜெயா,ஜன.22
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு நடந்த போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் டத்தேஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வெற்றிக்காக நானும் , முன்னாள் நிதி அமைச்சருமான துன் டாயிம் ஜைனுதீனும் பிரச்சாரம் செய்தோம். ஆனால், அவர் இப்போது எங்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார் என்று முன்னாள் பிரதமர் துன் மு காதீர் முகமது தமது ஆதங்கத்தை இன்று தெரிவித்துள்ளார்.
அன்வாருக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்தேன். அதேபோல் துன் டாயிம் ஜைனுதீனும் பிரிச்சாரம் செய்தார். ஆனால், நாங்கள் குற்றம் இழைத்து இருப்பதாக கூறி எங்களை அவர் விசாரணை செய்து வருகிறார் என்று இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் துன் மகாதீர் இதனை தெரிவித்தார்.
துன் பட்டத்தை கொண்டுள்ளவர்களை அமலாக்கத் தரப்பினர் விசாரணைசெய்வது மிகக் கடினம் என்று கூறப்படுவதை துன் மகாதீர் மறுத்தார். இருந்த போதிலும் எந்த விசாரணைக்கும் தாம் தயாராக இருப்பதாக 98 வயதான துன் மகாதீர் குறிப்பிட்டார்.








