Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஈரான்-இஸ்ரேல் நெருக்கடி: 17 மலேசியர்கள் உள்பட 24 பேர் பாதுகாப்புடன் தாயகம் திரும்பினர்
தற்போதைய செய்திகள்

ஈரான்-இஸ்ரேல் நெருக்கடி: 17 மலேசியர்கள் உள்பட 24 பேர் பாதுகாப்புடன் தாயகம் திரும்பினர்

Share:

கோலாலம்பூர், ஜூன்.23-

கடும் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் ஈரான் பதட்ட நிலை மத்தியில் அந்த நாட்டிலிருந்து 17 மலேசியர்கள் உள்பட 24 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.

அவர்களை ஏற்றிய மலேசியன் ஏர்லைன்ஸ் MH 781 விமானம் நேற்றிரவு 11.03 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான
நிலையத்தின் முதலாவது முனையத்தை வந்தடைந்தது.

வெளியுறவு அமைச்சின் இரு வழி உறவுகள் பிரிவு துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ அஹ்மாட் ரோஸியா அப்துல் கானி, விமான நிலையத்தில் வந்தடைந்தவர்களை வரவேற்றார்.

நாடு திரும்பியவர்களில் 17 மலேசியர்கள், அவர்களின் பராமரிப்பில் உள்ள ஆறு ஈரானியர்கள் ஒரு சிங்கை பிரஜையும் அடங்குவர்.

தாங்கள் தெஹ்ரானிலிருந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவைத் தரைமார்க்காகக் கடந்து வந்ததாக இந்த குழுவுக்கு தலைமை தாங்கிய ஈரானுக்கான மலேசியத் தூதர் கைரி ஓமார் கூறினார்.

மேற்கிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து விலகி, கிழக்குக் திசையில் நீண்ட பயணத்தைத் தேர்ந்தெடுக்க தாங்கள் முடிவெடுத்ததாக அவர் கூறினார்.

எல்லையைக் கடக்க மலேசியர்களை அனுமதிப்பதில் துருக்மெனிஸ்தான் அரசு நல்ல ஒத்துழைப்பை நல்கியது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை