கோலாலம்பூர், நவ. 29-
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான மழை – வெள்ளம் காரணமாக, அனைத்து அமைச்சர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் அன்வர் இப்ராஹிம் அனைத்து அமைச்சர்களையும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அவர் இதனை இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு Presint 17 இல் உள்ள Surau Pudinaவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறினார்.








