May 28, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா மாநிலத்தில் 4 கொள்ளையர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மலாக்கா மாநிலத்தில் 4 கொள்ளையர்கள் கைது

Share:

மலாக்கா, மார்ச்.25-

மலாக்கா மாநிலத்தில் தனிநபராக வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்த 4 கொள்ளையர்களை போலீசார் வளைத்துப் பிடித்துள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்துள்ளார்.

சாலே, நாதன், ஜோசப் மற்றும் ஜெபோட் என்ற அந்த 4 கொள்ளையர்கள் பிடிபட்டது மூலம் மொத்தம் 76 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்களைக் கொள்ளையடித்த சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கிரிஸ்டப்பர் பாதிட் குறிப்பிட்டார்.

31 க்கும் 58 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நால்ரும் வீடு புகுந்து திருடுதல், வழிப்பறி கொள்ளை முதலிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கிரிஸ்டப்பர் பாதிட் இதனைத் தெரிவித்தார்.

இதில் சாலே என்ற 48 வயதுடைய நபர், கோலாலம்பூரில் பாதுகாவலர் வேலை செய்து கொண்டு, மலாக்காவில் கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். ஆள் இல்லாத வீட்டில் நுழைந்து சுமார் 45 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அந்த வீட்டில் பதிவு செய்யப்பட்ட கைரேகையை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட பாதுகாவலரைத் தாங்கள் கைது செய்ததாக கிரிஸ்டப்பர் பாதிட் குறிப்பிட்டார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது