May 24, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரின்  தீவிர கண்காணிப்பில் அந்நியர்
தற்போதைய செய்திகள்

போலீசாரின் தீவிர கண்காணிப்பில் அந்நியர்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 04-

மலேசியாவின் சட்டங்களை மீறி குற்றங்களை இழைத்து வருவதாக சந்தேகிக்கப்படுகின்ற அந்நிய நாட்டவர்கள், தொடர்ந்து போலீசாரின் தீவிர கண்காணிப்பில் இருப்பர் என்று போலீஸ் படை தலைவர் தன் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

பொது மக்கள் வழங்கக்கூடிய தகவல்கள் மற்றும் உளவுப்பிரிவின் குறிப்புகளை அடிப்படையாக கொண்டு ,தனது சோதனை நடவடிக்கையை போலீஸ் துறை தீவிரப்படுத்தி வரும் என்று ஐ.ஜி.பி. [I.G.P]குறிப்பிட்டார்.

அந்நிய நாட்டவர்கள் புரியக்கூடிய குற்றச்செயல்கள், ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும் சம்பந்தப்பட்டு இருக்கவில்லை. மாறாக, ஏனைய நாட்டவர்களும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்று தன் ஸ்ரீ ரசாருதீன் கூறினார்.

கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்- கில் கடந்த வெள்ளிக்கிழமை ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் பல்வேறுகுற்றச்செயல்களில் ஈடுபட்ட 20 ஆப்பிரிக்க நாட்டவர் , கைது செய்யப்பட்டது தொடர்பில் ஐ.ஜி.பி. எதிர்வினையாற்றினார்

Related News