பாங்கி, ஜூன் 19-
இம்மாத தொடக்கத்தில், மிசா ஓசாவா என்ற பெயரை கொண்டு டெலிகிராம் கணக்கில் வாடிக்கையாளர்களை தேடி விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆறு மாதக் கர்ப்பிணி பெண் ஒருவர் பண்டார் பாரு பாங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
27 வயது சித்தி அமிசா பஹாருதீன் என்ற அந்த கர்ப்பிணி பெண் மாஜிஸ்திரேட் நூர்தியானா முகமது நவாவி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 372B பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இவ்வாண்டு ஜூன் 6 ஆம் தேதி மாலை 4 மணியளவில் காஜாங், பண்டார் புக்கிட் மக்கோத்தா -வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அந்த பெண் HIV -யினால் பாதிப்படைந்திருப்பதாகவும் கர்ப்பிணியாக இருப்பதாகவும் தமக்கு தண்டனையை குறைத்து தரும்படி மேல்முறையீடு செய்துள்ளார்.








