வீடமைப்புப்பகுதி ஒன்றில் தங்கள் வீட்டிற்கு செல்ல லிப்டில் ஏறுவதற்கு முற்பட்ட கணவ,ன் மனைவ ஆகியோர் அடையாளம் தெரியாத நபரால் எரிதிரவக வீச்சுக்கு ஆளாகினர். இச்சம்பவம் நேற்று செலாயாங்கில் உள்ள பங்சாபுரீ லக்சமன் ஜெயா அடுக்குமாடி வீட்டுப்பகுதியில் நிகழ்ந்தது. எரிதிரவ வீச்சினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் கணவன் மனைவி, தற்போது செலாயாங் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண் ரொட்டி வியாபாரியான கணவன், மனைவிக்கு எதிராக இந்த எரிதிரவ வீச்சை நடத்திய நபர் குறித்து அந்த வீடமைப்புப்பகுதியின் லிப்ட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அநத் தம்பதியரின் கடை தீயிடப்பட்டு நாசப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


