கோத்தாகினபாலு, நவ.9-
சபா மாநிலத்தில் தென் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இன்று ஏற்பட்ட மின்சார விநியோகத் தடை, தற்போது வழக்க நிலைக்கு திரும்பிவிட்டதாக சபா மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சண்டக்கான், கினாபாத்தாங்கான், பெலுரான் மற்றும் குனாக் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மின்சாரத்தடையைத் தொடர்ந்து சிரமைப்புப்பணிகள் முழு வீச்சில் மேற்கொண்டதன் பலனாக மின்சார விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியுள்ளதாக சபா மின்சார வாரியம் இன்று மாலை 4.35 மணியளவில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








