கோலாலம்பூர், மே.05-
கடந்த மாதம், வங்சா மாஜூவில் இரு மைகாட் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, மானிய விலை பெட்ரோலை வாங்கிய குற்றத்தை ஒப்புக் கொண்ட, வங்காள தேசத்தைச் சேர்ந்த பெட்ரோல் நிலைய ஊழியருக்கு, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 10,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.|
51 வயதான Jakir Hossain என்ற அந்த நபர், தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீதிபதி Aina Azahra Arifin முன்னிலையில் ஒப்புக் கொண்டார்.
உரிய அனுமதி அல்லது நியாயமான காரணமின்றி, Lim Mei Cheow என்ற நபருக்குச் சொந்தமான மைகாட்டைப் பயன்படுத்தி Shell பெட்ரோல் நிலையத்தில் மானிய பெட்ரோல் வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதேபோல், மற்றொரு குற்றச்சாட்டில், Yap Thin Wuei என்பவரின் மைகாட்டைப் பயன்படுத்தி Jakir பெட்ரோல் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.








