Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பிச்சைக்காரர்கள் நிரம்பும் தளமாக மலேசியா அனுமதிக்கப்படாது

Share:

கோலாலம்பூர், ஜன.23-

சிறார்களை பிச்சை எடுக்க வைத்து, சுரண்டி வரும் கும்பல்களின் தளமாக மலேசியா உருவாகுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நன்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

இத்தகைய மோசடிக்கும்பல்களின் செயல்கள் மலேசியாவின் தோற்றத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கச் செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக அறியா பருவத்தில் உள்ள சிறார்களைப் பயன்படுத்தி, அவர்களை பிச்சை எடுக்க வைக்கும் செயல், ஒரு குற்றச்செயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக நன்சி சுக்ரி தெரிவித்தார்.

பிச்சைக்காரர்களை துடைத்தொழிக்கும் நடவடிக்கையை தமது அமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி