Mar 27, 2026
Thisaigal NewsYouTube
பட்டப் படிப்பை முடிக்க நோய் ஒரு தடையல்ல என நிரூபித்தார் ஏம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர் தேவா சுரேந்திரா சில்வடம்
தற்போதைய செய்திகள்

பட்டப் படிப்பை முடிக்க நோய் ஒரு தடையல்ல என நிரூபித்தார் ஏம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர் தேவா சுரேந்திரா சில்வடம்

Share:

சுங்கை பட்டாணி, ஜூன்.21-

ஏழு ஆண்டுகளாக muscular dystrophy எனப்படும் தசை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர் தேவா சுரேந்திரா சில்வடம், தனது படிப்பைத் தொடர்ந்து இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார். 26 வயதான தேவா, அவரது பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழாவில் நண்பர்களின் உதவியுடன் மேடைக்குச் சென்று தமது பட்டத்தைப் பெற்றார். ஐந்து வருடக் கல்லூரி வாழ்க்கையில் தசைகள் பலவீனமடைதல், முதுகெலும்பு வளைவு போன்ற பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், அவர் வணிகத் துறையிலும் தகவல் அமைப்பு மேலாண்மை துறையிலும் இளங்கலைப் பட்டத்தை முடிப்பதில் வெற்றி பெற்றார்.

பெற்றோரின் ஆதரவு, பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட வசதிகள்,, நண்பர்களின் உதவி ஆகியவை அவரது கல்விப் பயணத்தில் பெரும் பங்காற்றின. தற்போது பினாங்கில் வணிக அமைப்பு ஆய்வாளராகப் பணிபுரியும் தேவா, தனது உடல்நிலையைப் புரிந்து கொண்டு நெகிழ்வான, இலகுவான பணிச்சூழலை வழங்கிய தனது முதலாளிக்கு நன்றியைத் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை