Jul 4, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் வழக்கு: எதிர்வாதம் புரியும்படி ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ்காரருக்கு உத்தரவு
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் வழக்கு: எதிர்வாதம் புரியும்படி ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ்காரருக்கு உத்தரவு

Share:

சிரம்பான், ஜூலை.30-

போதைப்பொருள் கடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பணி ஓய்வுப் பெற்ற முன்னாள் போலீஸ்காரரை, எதிர்வாதம் புரியும்படி சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அமினுடின் அமின் என்ற 66 வயதுடைய அந்த போலீஸ்காரருக்கு எதிரான குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரங்கள் உள்ளன என்பதில் பிராசிகியூஷன் தரப்பு நிரூபித்துள்ளதாக நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தெரிவித்தார்.

எனவே தனது தரப்பு வாதத்தை முன் வைப்பதற்கு அந்த முன்னாள் போலீஸ்காரர் எதிர்வாதம் புரிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுவதாக ரோஹானி இஸ்மாயில் குறிப்பிட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி நெகிரி செம்பிலான், ஜெம்போல், கம்போங் புக்கிட் கெர்டாஸ் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிற்குப் பின்னால் அந்த முன்னாள் போலீஸ்காரர் 573 கிராம் போதைப்பொருளைத் தன் வசம் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது