கோலாலம்பூர், டிச. 14-
சர்சைக்குரிய வலைவாசியான பாபாகோமா என்ற வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நிறுவனம் ஒன்றின் பெயரைப் பயன்படுத்தி, வசூல் வேட்டை மோசடியில் ஈடுபட்டது தொடர்பில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அவரை கைது செய்ததாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
எனினும் விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக ஐஜிபி அறிவித்துள்ளார்.








