சிலாங்கூர், ஜூலை 25-
சிலாங்கூர், சுங்கை பெலேக் -க்கிலுள்ள சீனப்பள்ளி ஒன்றின் நிதி திரட்டும் நிகழ்ச்சியில், மதுபான நிறுவன தரப்பு கலந்துக்கொண்டது சர்ச்சையாகியுள்ள நிலையில், அதில், பள்ளி தரப்பு மௌனம் காப்பது ஏன்? என டிஏபி கட்சியைச் சேர்ந்த சுங்கை பெலேக் சட்டமன்ற உறுப்பினர் எல்வி கியான் கியோங் கேள்வியெழுப்பினார்.
அந்நிகழ்ச்சிக்கு, சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம், வியூக பங்காளியாக உள்ளது, தமக்கும் வீடமைப்பு ஊராட்சி துணை அமைச்சர் ஐமன் அதிரா சாபு-வுக்கும் தெரியாது.
அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒரே காரணத்திற்காக, தாங்கள் சிரமமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, தாங்களே அதனை தனித்து எதிர்கொண்டு வருவது போல உணருவதாக கூறிய எல்வி, பள்ளி தரப்பு உரிய விளக்கத்தை பொதுவில் வழங்க வேண்டும் என்றார்.








