Mar 6, 2026
Thisaigal NewsYouTube
மேற்கு ஆசியப் பதற்றம்: எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம்
தற்போதைய செய்திகள்

மேற்கு ஆசியப் பதற்றம்: எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.06-

மேற்கு ஆசியாவில், குறிப்பாக ஈரான் மற்றும் அதன் அண்டை பகுதிகளில் நிலவும் போர் பதற்றத்தைத் தொடர்ந்து, மலேசியாவின் எல்லைப் பகுதிகள் மற்றும் நாட்டின் முக்கிய இலக்குகளில் பாதுகாப்பை அதிகரிக்க அரச மலேசிய போலீஸ் படை உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய புவிசார் அரசியல் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாநில போலீஸ் துறைத் தலைவர்கள் மற்றும் துறை இயக்குநர்களுக்கும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சொந்தமான அலுவலகங்கள், சொத்துக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தீவிரக் கண்காணிப்பு செலுத்தப்படும். சில தரப்பினரால் இலக்கு வைக்கப்படலாம் என அஞ்சப்படும் வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பான சூழலை உறுதிச் செய்ய ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலம் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி, நிலவும் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஐஜிபி தெரிவித்தார்.

Related News

சிம்பாங் பூலாய்: ஓடிக் கொண்டிருந்த 3 கார்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சிம்பாங் பூலாய்: ஓடிக் கொண்டிருந்த 3 கார்கள் மீது மரங்கள் விழுந்து விபத்து - 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கெவின் மொரைஸ் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ மருத்துவ அதிகாரியின் மறுஆய்வு மனு ஜூலை 31-இல் விசாரணை

கெவின் மொரைஸ் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ மருத்துவ அதிகாரியின் மறுஆய்வு மனு ஜூலை 31-இல் விசாரணை

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை, கோயில் வளாகத்தின் முன் சட்டவிரோதப் போராட்டமா? பினாங்கு போலீசார் கடும் எச்சரிக்கை

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை, கோயில் வளாகத்தின் முன் சட்டவிரோதப் போராட்டமா? பினாங்கு போலீசார் கடும் எச்சரிக்கை

போலீஸ் விசாரணையைத் தடுக்க டையிம் ஸைனுடின் குடும்பத்தினர் வழக்கு

போலீஸ் விசாரணையைத் தடுக்க டையிம் ஸைனுடின் குடும்பத்தினர் வழக்கு

துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு

துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு

போலீஸ்  நிலையம் மீது தாக்குதல் நடத்தச் சதி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 6 இளைஞர்கள் கைது

போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தச் சதி: ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 6 இளைஞர்கள் கைது