Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சுவாராம் சமூக ஆர்வலர்களை குற்றஞ்சாட்டுவதை தவிர்ப்பீர்

Share:

கோலாலம்பூர், பிப்.24-

சுவாராம் மனித உரிமை அமைப்பின் இரண்டு சமூக ஆர்வலர்களையும், மற்றொரு நபரையும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கும் திட்டத்தை உள்துறை அமைச்சு கைவிட வேண்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புத்ராஜெயாவில் தடை விதிக்கப்பட்ட பகுதி என்று வகைப்படுத்தப்பட்ட உள்துறை அமைச்சின் அலுவலகத்திற்குள் நுழைந்ததற்காக மூவரை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு உள்துறை அமைச்சு திட்டம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுவாராமின் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி, அதன் திட்டமிடல் அதிகாரி அஸுரா நஸ்ரோன் மற்றும் மற்றொரு நபர் மீது குற்றஞ்சாட்டப்படுவதை தவிர்க்குமாறு ராயர் கேட்டுக்கொண்டார்.

கடந்த பிப்ரவரி 11 அம் தேதி சுங்கை பூலோ சிறைச்சாலையின் முன்புறம் 32 சொஸ்மா கைதிகளின் குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதையும், அவர்கள் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்று கோரியே உள்துறை அமைச்சுக்கு மகஜர் கொடுக்க மூவரும் சென்றதாக ராயர் விளக்கினார்.

மனித உரிமைக்காக போராடும் எம்.பி.க்கள் என்ற முறையில் மனித உரிமையை முன்வைத்து மகஜர் கொடுக்க சென்றவர்கள் மீது அத்துமீறல் குற்றச்சாட்டு கொண்டு வருவதை வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்று ராயர் விளக்கினார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு