Mar 15, 2026
Thisaigal NewsYouTube
சிகிச்சைக்கான வைப்புத் தொகையைத் தவிர்க்கும் வெளிநாட்டினர்? சுகாதார அமைச்சு தீவிர விசாரணை
தற்போதைய செய்திகள்

சிகிச்சைக்கான வைப்புத் தொகையைத் தவிர்க்கும் வெளிநாட்டினர்? சுகாதார அமைச்சு தீவிர விசாரணை

Share:

புத்ராஜெயா, மார்ச்.15-

கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெளிநாட்டினர், கட்டணம் செலுத்துவதைத் தவிர்க்கும் நோக்கில் கடப்பிதழ் கொண்டு வராமல் ஏமாற்றுவதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகார்கள் குறித்து சுகாதார அமைச்சு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அவசரப் பிரிவில் பணியாற்றும் ஒரு செவிலியர் மூலம் வெளிச்சத்திற்கு வந்த இந்தப் புகார் குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட், தகவல்களை வழங்கும் நபர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்து விசாரணை நடத்தப்படும் என்றார். அமைச்சின் விதிமுறைப்படி, வெளிநாட்டினர் வார்டில் அனுமதிக்கப்படும் முன் 1,400 ரிங்கிட் முதல் 2,800 ரிங்கிட் வரை வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்பதால், அதனைத் தவிர்க்க அவர்கள் அடையாள ஆவணங்கள் இல்லை எனப் பொய் கூறுவதாகக் கூறப்படுகிறது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் Lampiran A படிவம் என்பது கட்டண விலக்கு அல்ல, அது சிகிச்சைக்குப் பிந்தைய கட்டணத் தள்ளி வைப்பு மட்டுமே என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்