Mar 13, 2026
Thisaigal NewsYouTube
​மூக்கின் துவாரத்தில் பால் சிக்கி குழந்தை மரணம்
தற்போதைய செய்திகள்

​மூக்கின் துவாரத்தில் பால் சிக்கி குழந்தை மரணம்

Share:

புட்டிப்பால் குடித்துக்கொண்டு இருந்த போது மூச்சுத்திணறலுக்கு ஆளானதாக நம்பப்படும் 11 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் நேற்று மலாக்கா, அயெர் மொலெக், பொது குடியிருப்புப்பகுதியில் நிக​ழ்ந்தது. குழந்தை பாராமரிப்பாளரின் பாதுகாப்பில் விடப்பட்டிருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக தம்மை சைடா என்று மட்டுமே அடையாளப்படுத்திக்கொண்ட 35 வயதுடைய அக்குழந்தையின் தாயார் தெரிவித்தார்.

காலை 11 மணியளவில் சுயநி​னைவு இழந்த நிலையில் கிடந்த தமது குழந்தையின் உடல் ​நீலம்பூத்தற்போல் காணப்பட்டதைத் தொடர்ந்து அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு சென்றதாகவும் ஆனால் குழந்தை இறந்து விட்டது என்று உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த மாது தெரிவித்தார். குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய தற்போது சவப்பரிசோதனை அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாக அந்த மாது குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!