மலேசிய இந்தியர்கள் சமூகவில், பொருளாதார உருமாற்றுப் பிரிவான மித்ராவின் சிறப்புப்பணிக்குழுவின் தலைவராக சுங்கை பூலோ பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பழம்பெரும் அரசியல்வாதியும், மஇகாவின் முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவியுமான டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணனின் பேரனுமாகிய டத்தோ ரமணன், பிரதமர் துறையின் கீழ் இடம் பெற்றுள்ள மித்ராவின் சிறப்புப்பணிக்குழுத் தலைவராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
குவின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றவரான 41 வயது டத்தோ ரமணன் தலைமையில் அமைக்கப்பட்ட மித்ரா சிறப்புப்பணிக்குழுவில் மஇகா சார்பில் மேலவை உறுப்பினர் டத்தோ சி. சிவராஜா, ஜ.செ.க. சார்பில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிரவ், பி.கே.ஆர். சார்பில் சிகமாட் எம்.பி. ஆர். யுனேஸ்வரன் மற்றும் மித்ராவின் தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


