ஜாலான் மெர்சிங்கிலிருந்து ஃபெல்டா நித்தார் 1 செல்லும் வழியில் காரும் லாரியும் மோதியதில் தாயும் பிள்ளையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இன்று காலை 7.37 மணியளவில் நடந்த இவ்விபத்தில் 33 வயதுடைய சுபாய்டா சாகாரியா, 4 வயதுடைய உவாய்ஸ் ராயன் முஹமாட் மாண்டதாக ஜொகூர், தீயணைப்பு, மீட்பு படை தெரிவித்திருந்தது.
பெரோடுவா வீவா ரக வாகனமும், 10 tan எடை கொண்ட லாரியும் மோதியதில் அவ்விருவரும் காரில் மாட்டி கொண்டதாகவும் பின்பு தீயணைப்பு படையினர் மீட்டதாகவும் ஜொகூர் தீயணைப்பு அதிகாரி அனுவார் ஹுசெயின் கூறினார்.








