Mar 11, 2026
Thisaigal NewsYouTube
குடிநீர் விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல கெடா முடிவு
தற்போதைய செய்திகள்

குடிநீர் விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல கெடா முடிவு

Share:

கெடா மாநிலத்திற்கும், பினாங்கிற்கும் இடையில் நிலவி வரும் குடிநீர் விநியோகம் மீதான சர்ச்சையை தீர்த்துக் கொள்வதற்கு நீதிமன்ற நடவடிக்கையை நாடவிருப்பதாக கெடா மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

கெடா, சுங்கை மூடா ஆற்றிலிருந்து பினாங்கு மாநிலம் பெற்று வருகின்ற சுத்திகரிக்கப்படாத நீருக்கு கட்டணம் வழங்க வேண்டும் என்பது தொடர்பில் பினாங்கு அரசுக்கு எதிராக தாங்கள் சட்ட நடவடிக்கையை தொடுக்கவிருப்பதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் அறிவித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

கெடாவில் உள்ள உலு மூடா மலைப்பகுதியில் தொடங்கி, பினாங்கு வரை பாயும் மூடா ஆற்றின் நீருக்கு பினாங்கு அரசு முறைப்படி கெடா மாநில அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். என்று கெடா மாநில அரசு ஏற்கனவே தனது கோரிக்கையை பினாங்கு அரசுக்கு முன்வைத்து விட்டதாக சனூசி தெரிவித்துள்ளார்.

ஆனால், மாநில அரசு விடுத்த கோரிக்கைக்கு பினாங்கு அரசு இதுவரையில் எந்தவொரு எதிர்வினையும் ஆற்றாமல் இருந்து வருவது தொடர்பில் சுங்கை மூடா ஆறு யாருக்கு சொந்தம் என்பதை தீர்மானிப்பதற்கு இவ்வழக்கு தொடுக்கப்படவிருப்பதாக சனூசி குறிப்பிட்டுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

குடிநீர் விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல கெடா மு... | Thisaigal News