மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், குறித்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தை வந்தடையாததால், கோலாலம்பூருக்குத் திரும்ப வேண்டிய 200 க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு நேற்று பின்னிரவு 1.45 மணிக்கு, மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். இந்த விமானத்தில் பயணம் செய்ய சுமார் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் பரிசோதனை அனைத்தும் முடித்து தயார் நிலையில் இருந்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு விமானம் புறப்படவில்லை. விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஏற்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், இன்று காலை 7 மணி வரை விமானம் வராததால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனப் பணியாளர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈட்டுப்பட்டனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக, கோலாலம்பூரிலிருந்து நேற்று இரவு 9.45 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH180 விமானம், இயந்திரக் கோளாரினால் மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்ப வேண்டிய நிலையில், சென்னைக்கான விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


