May 1, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தீடீர் ரத்து
தற்போதைய செய்திகள்

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தீடீர் ரத்து

Share:

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், குறித்த நேரத்தில் சென்னை விமான நிலையத்தை வந்தடையாததால், கோலாலம்பூருக்குத் திரும்ப வேண்டிய 200 க்கும் மேற்பட்ட பயணிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு நேற்று பின்னிரவு 1.45 மணிக்கு, மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் செல்ல வேண்டும். இந்த விமானத்தில் பயணம் செய்ய சுமார் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் பரிசோதனை அனைத்தும் முடித்து தயார் நிலையில் இருந்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு விமானம் புறப்படவில்லை. விமானம் புறப்படுவதற்கு தாமதம் ஏற்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்று காலை 7 மணி வரை விமானம் வராததால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனப் பணியாளர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈட்டுப்பட்டனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, கோலாலம்பூரிலிருந்து நேற்று இரவு 9.45 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான MH180 விமானம், இயந்திரக் கோளாரினால் மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்ப வேண்டிய நிலையில், சென்னைக்கான விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி