மனநல பாதிப்புக்கு ஆளானவர் என்று நம்பப்படும் நபரால் தீயிடப்பட்டதாக கூறப்படும் 6 கார்கள் தீயில் அழிந்தன. இச்சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் கிள்ளான், பண்டர் புக்கிட் திங்கி, ஜாலான் பத்து நிலம் 3 இல் நிகழ்ந்தது. கார்கள் கொழுந்து விட்டு எரிவதை அணைக்க முற்பட்டதாக நம்பப்படும் பட்டறை பணியாளர் ஒருவர் தீக்காயங்களுக்கு ஆளாகியிருப்பபதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு,மீட்புப்படை உதவி இயக்குநர் முகமதுல் எஹ்சான் முகமது ஜைன் தெரிவித்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறுவர் கொண்ட தீயணைப்புப்படையினர் சுமார் அரை மணி நேரத்தில் தீயை கட்டுப்படுத்திய போதிலும் இத்தீ சம்பவத்தில் நிசான் சென்ட்ரல், பெரோடுவா பெஸ்ஸா, ஆக்ஸியா, மைவி, மஸ்டா மற்றும் புரோட்டான் சாகா ஆகிய 6 கார்கள் முற்றாக அழிந்ததாக முகமதுல் எஹ்சான் குறிப்பிட்டார்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


