Jan 27, 2026
Thisaigal NewsYouTube
இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 3 மலேசியர்கள் மும்பை விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு
தற்போதைய செய்திகள்

இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 3 மலேசியர்கள் மும்பை விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு

Share:

கோலாலம்பூர், ஜனவரி.27-

இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று மலேசியர்கள், மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் அனைத்துலக விமான நிலையத்தில், இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வன்முறையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மலேசியாவில் கொலை மற்றும் தீவைப்பு சம்பவ வழக்குகளுக்காகத் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான அந்த மூவரும், மலேசியாவில் இருந்து மும்பை வழியாக இங்கிலாந்தின் மான்செஸ்டருக்குத் தப்பி ஓடினர்.

ஆனால் இங்கிலாந்து குடிநுழைவு அதிகாரிகள் அவர்கள் மூவரையும் மான்செஸ்டருக்குள் அனுமதிக்க மறுத்ததால் மீண்டும் மும்பைக்கே நாடு கடத்தப்பட்டனர்.

இந்நிலையில் மும்பை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர்கள், அங்கிருந்த இந்திய பாதுகாப்பு அதிகாரிகளிடம் வன்முறையில் ஈடுபட்டதையடுத்து, உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, அவர்கள் மூவரையும் மலேசியாவிற்கு அழைத்து வர சிறப்புப் போலீஸ் படை ஒன்று மும்பைக்கு விரைந்துள்ளது.

Related News

தொலைப்பேசி மோசடியில் சிக்கிய பினாங்கு மருத்துவர் 2 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழந்தார்

தொலைப்பேசி மோசடியில் சிக்கிய பினாங்கு மருத்துவர் 2 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழந்தார்

மலேசியாவில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன - அமைச்சு தகவல்

மலேசியாவில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன - அமைச்சு தகவல்

மலேசியா இழந்த பொதுநிதியானது மீட்கப்பட்ட 15.5 பில்லியனை விட அதிகம்: அன்வார்

மலேசியா இழந்த பொதுநிதியானது மீட்கப்பட்ட 15.5 பில்லியனை விட அதிகம்: அன்வார்

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: டிரெய்லர் லாரியில் சிக்கி நபர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: டிரெய்லர் லாரியில் சிக்கி நபர் உயிரிழப்பு

மலேசியாவில் ஒரு கிராம் தங்கம் 700 ரிங்கிட்டைத் தாண்ட வாய்ப்பு: ஆய்வாளர் தகவல்

மலேசியாவில் ஒரு கிராம் தங்கம் 700 ரிங்கிட்டைத் தாண்ட வாய்ப்பு: ஆய்வாளர் தகவல்

முன்னாள் இராணுவத் தளபதி முகமட் ஹாஃபிஸுடின் புகார்: விசாரணையைக் கையில் எடுத்தது புக்கிட் அமான்

முன்னாள் இராணுவத் தளபதி முகமட் ஹாஃபிஸுடின் புகார்: விசாரணையைக் கையில் எடுத்தது புக்கிட் அமான்

இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 3 மலேசியர்கள் மும்பை... | Thisaigal News