May 6, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: டிரெய்லர் லாரியில் சிக்கி நபர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: டிரெய்லர் லாரியில் சிக்கி நபர் உயிரிழப்பு

Share:

காஜாங், ஜனவரி.26-

காஜாங் சில்க் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து டிரெய்லர் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் கூறுகையில், காலை 9 மணியளவில் சில்க் நெடுஞ்சாலையின் 25.3 கிலோமீட்டர் பாதையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றார்.

வலதுபுறப் பாதையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்துள்ளார். அப்போது அருகில் வந்த டிரெய்லர் லாரியின் அடியில் அவர் சிக்கிக் கொண்டார்.

லாரியை ஓட்டி வந்த 53 வயதுடைய உள்ளூர் நபர், எதிர்பாராத விதமாக விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் கண்டு லாரியை நிறுத்த முயன்றும் அது பலனளிக்கவில்லை.

47 வயதான அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், உடல் உறுப்புகள் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக நாஸ்ரோன் குறிப்பிட்டார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்