Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: டிரெய்லர் லாரியில் சிக்கி நபர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து: டிரெய்லர் லாரியில் சிக்கி நபர் உயிரிழப்பு

Share:

காஜாங், ஜனவரி.26-

காஜாங் சில்க் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டி ஒருவர், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து டிரெய்லர் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் கூறுகையில், காலை 9 மணியளவில் சில்க் நெடுஞ்சாலையின் 25.3 கிலோமீட்டர் பாதையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றார்.

வலதுபுறப் பாதையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்துள்ளார். அப்போது அருகில் வந்த டிரெய்லர் லாரியின் அடியில் அவர் சிக்கிக் கொண்டார்.

லாரியை ஓட்டி வந்த 53 வயதுடைய உள்ளூர் நபர், எதிர்பாராத விதமாக விழுந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரைக் கண்டு லாரியை நிறுத்த முயன்றும் அது பலனளிக்கவில்லை.

47 வயதான அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், உடல் உறுப்புகள் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக நாஸ்ரோன் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!