Mar 1, 2026
Thisaigal NewsYouTube
கடல் வழியாக ஊடுருவ முயற்சி: பூலாவ் சாயாக் அருகே 37 சட்டவிரோதக் குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

கடல் வழியாக ஊடுருவ முயற்சி: பூலாவ் சாயாக் அருகே 37 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

Share:

கோலா கெடா, மார்ச்.01-

மலேசியக் கடலோரக் காவல் படையும் கடல்சார் காவல்துறையும் இணைந்து நடத்திய சோதனையில், கோலா மூடா, பூலாவ் சாயாக் அருகே சட்டத்திற்குப் புறம்பாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மியன்மார், வங்காளதேசம், தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என பெர்லிஸ், கெடா மாநிலக் கடலோரக் காவல் படை முதல் நிலைத் தளபதி ரொம்லி முஸ்தஃபா தெரிவித்தார்.

இவர்கள் ஒவ்வொருவரும் இடைத்தரகர்களுக்கு சுமார் 15 ஆயிரம் ரிங்கிட் பணம் கொடுத்து, அதிவேகப் படகு மூலம் அண்டை நாட்டிலிருந்து மலேசியாவிற்குள் நுழைய முயன்றுள்ளனர். ஊடுருவல்காரர்களைக் கரையில் இறக்கி அழைத்துச் செல்லக் காத்திருந்த மூன்று வாகனங்களையும், அதற்குத் துணையாக இருந்த இரண்டு வங்காளதேச ஆடவர்களையும் அதிகாரிகள் அதே இடத்தில் மடக்கிப் பிடித்தனர். பிடிபட்டவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்காகக் குடிநுழைவுச் சட்டம், ஆள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

பெர்லிஸ் அரசரின் வெள்ளி விழா கொண்டாட்டம்: 1,00,000 மக்கள் வருகை தருவர் என எதிர்பார்ப்பு

பெர்லிஸ் அரசரின் வெள்ளி விழா கொண்டாட்டம்: 1,00,000 மக்கள் வருகை தருவர் என எதிர்பார்ப்பு

பாதுகாப்பான இணையப் பயன்பாடு: அடித்தட்டு மக்களை நோக்கி மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம்

பாதுகாப்பான இணையப் பயன்பாடு: அடித்தட்டு மக்களை நோக்கி மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம்

மேற்காசியப் போர்: உலக வர்த்தகத்திற்கும் மலேசியப் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு

மேற்காசியப் போர்: உலக வர்த்தகத்திற்கும் மலேசியப் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு

இந்தியாவுக்கு கடத்த முயன்ற 4 சியாமாங் குரங்குகள் மீட்பு: பெண் ஒருவர் கைது

இந்தியாவுக்கு கடத்த முயன்ற 4 சியாமாங் குரங்குகள் மீட்பு: பெண் ஒருவர் கைது

விமானப் போக்குவரத்து ரத்து: டோஹா, ஜெட்டாவிற்கான சேவைகளை மார்ச் 4 வரை நிறுத்தியது மாஸ் (MAS)

விமானப் போக்குவரத்து ரத்து: டோஹா, ஜெட்டாவிற்கான சேவைகளை மார்ச் 4 வரை நிறுத்தியது மாஸ் (MAS)

போலி முதலீட்டு மோசடிகள்: ஒரே மாதத்தில் மலேசியர்கள் 115 மில்லியன் ரிங்கிட்டை இழந்த சோகம்

போலி முதலீட்டு மோசடிகள்: ஒரே மாதத்தில் மலேசியர்கள் 115 மில்லியன் ரிங்கிட்டை இழந்த சோகம்