Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கோத்தா பாரு மருத்துவமனையில் மாயமான பச்சிளம் குழந்தை பாதுகாப்பாக உள்ளது!
தற்போதைய செய்திகள்

கோத்தா பாரு மருத்துவமனையில் மாயமான பச்சிளம் குழந்தை பாதுகாப்பாக உள்ளது!

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.25-

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி, ராஜா பெரும்புவான் ஸைனாப் மருத்துவமனையின், குழந்தைகள் வார்டில் இருந்து, முறையான ஒப்புதல் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை, அதன் தாயாரிடம் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணியளவில், குழந்தை காணாமல் போனதை அறிந்த மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக கோட் பிங்க் அவசர எச்சரிக்கையை விடுத்து, தேடுதல் பணிகளை மேற்கொண்டதாக கிளந்தான் மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஸைனி ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளைச் சோதனையிட்ட போது, தம்பதி ஒருவர் அக்குழந்தையை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.

இந்நிலையில், செப்டம்பர் 23-ஆம் தேதி, கோத்தா பாரு மாவட்ட சுகாதார அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன், அத்தம்பதியின் வீட்டிற்குச் சென்ற போது, அக்குழந்தையும், அதன் தாயாரும் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்