Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா பாரு மருத்துவமனையில் மாயமான பச்சிளம் குழந்தை பாதுகாப்பாக உள்ளது!
தற்போதைய செய்திகள்

கோத்தா பாரு மருத்துவமனையில் மாயமான பச்சிளம் குழந்தை பாதுகாப்பாக உள்ளது!

Share:

கோத்தா பாரு, செப்டம்பர்.25-

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி, ராஜா பெரும்புவான் ஸைனாப் மருத்துவமனையின், குழந்தைகள் வார்டில் இருந்து, முறையான ஒப்புதல் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை, அதன் தாயாரிடம் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.40 மணியளவில், குழந்தை காணாமல் போனதை அறிந்த மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக கோட் பிங்க் அவசர எச்சரிக்கையை விடுத்து, தேடுதல் பணிகளை மேற்கொண்டதாக கிளந்தான் மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஸைனி ஹுசேன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளைச் சோதனையிட்ட போது, தம்பதி ஒருவர் அக்குழந்தையை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.

இந்நிலையில், செப்டம்பர் 23-ஆம் தேதி, கோத்தா பாரு மாவட்ட சுகாதார அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன், அத்தம்பதியின் வீட்டிற்குச் சென்ற போது, அக்குழந்தையும், அதன் தாயாரும் பாதுகாப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து