Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் பரிசீலனை செய்யப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

மீண்டும் பரிசீலனை செய்யப்பட வேண்டும்

Share:

ஆயர் குரோ, ஜூலை.27-

நாட்டில் நிலவி வரும் புகை மூட்டம் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை காற்றின் தூய்மைக்கேட்டின் அளவு 200 யை தொடுமானால், பள்ளிகள் மூடப்பட நேரிடலாம் என கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் அறிவித்துள்ள முடிவு தொடர்பாக, அமைச்சர் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என மெக்பி எனப்படும் பெற்றோர் கல்வி செயல்பாட்டுக் குழுவின் மலாக்கா மாநிலத் தலைவர் மாக் சீ கின் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து, பிடிபிஆர் எனப்படும் வீட்டிலிருந்து கல்வி கற்கும் முறை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்மை அளிக்கும் வகையில் இல்லை என்றும் வேலைக்கும் செல்லும் பெற்றோர்களால் பிள்ளைகளை வீட்டிலிருந்து கண்காணிக்க அவர்கள் தயாராகவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.


கோவிட் 19 காலக் கட்டத்தில், இணையத் தொடர்பு பிரச்சனைகள், கணினி வசதியின்மை, கட்டொழுங்கு பிரச்சனைகள் பரவலாக இருந்தன என அவர் மேலும் கூறினார். புகை மூட்டப் பிரச்சனைக்குக் கல்வி அமைச்சு சுகாதார அமைச்சுடன் இணைந்து ஆக்கப்பூர்மான தீர்வை எடுக்கும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக மாக் சீ கின் கூறினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது